தினம் ஒரு திருக்குறள்

Tuesday, February 28, 2012

தாஜ்மாஹலை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்


காதல் என்றாலோ அல்லது
காதலின் நினைவு சின்னம் என்றாலோ நமக்கு
நினைவுக்கு வருவது என்னவோ தாஜ்மஹால் தான்


எத்தனை பேருக்கு தாஜ்மஹாலின் வரலாறு தெரியும் ?
முதலில் தாஜ்மஹாலை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
பிறகு ஷாஜகனை பற்றியும் ,மும்தாஜ் பற்றியும் தெரிந்து
கொள்ளுங்கள் ....................


இந்தியாவில் உத்திரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ள உலகப் பிரசித்திப் பெற்ற நினைவுச் சின்னமே தாஜ்மகால் ஆகும். 2009 - ஆம் ஆண்டு நடந்த புதிய உலக அதிசயங்கள் தேர்வில் இந்த தாஜ்மகால் முதல் இடத்தைப் பிடித்தது.
                தாஜ்மகாலை இந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் வம்சத்தில் வந்த ஷாஜகான் தனது மூன்றாவது இளம் மனைவியான மும்தாஜ் மகாலின் நினைவாக கட்டினார். இக்கட்டட வேலையானது 22,000 வேலையாட்களைக் கொண்டும், 1000 யானைகளைக் கொண்டும் 1631 - ஆம் ஆண்டு தொடங்கி 1653 - ஆம் ஆண்டு வரை நடந்தது. இதைக் கட்டி முடிக்க அன்றைய மதிப்பில் 32 கோடி செலவிடப்பட்டது. இக்கட்டிடத்தை கட்டிய கலைஞர்களின் கைகள் இதைவிட சிறந்த பிரிதொரு கட்டிடத்தை உருவாக்காதிருக்கும் பொருட்டு வெட்டப்பட்டதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
                தாஜ்மகால், பாரசீக, மத்திய ஆசியா மற்றும் முன்னைய முகலாய கட்டிடக்கலை மரபுகளை உள்ளடக்கிக் கட்டப்பட்டுள்ளது. தாஜ்மகால் முழுவதும் வெண்ணிற சலவைக் கற்களை பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதி வெள்ளை சலவைக்கற்களாலான சமாதி கட்டிடத்தைக் கொண்டது. தாஜ்மகாலின் நுழைவாயில் இதன் ஐந்து சிறப்பம்சங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்த நுழைவாயிலை கட்டிமுடிக்க ஆறு ஆண்டு காலம் பிடித்தது. இது பளிங்கு கற்களிலேயே விலை உயர்ந்த கற்களால் கட்டப்பட்டுள்ளது.
                தாஜ்மகாலின் மேற்கு பக்கத்தில் மெக்காவை நோக்கிய வண்ணம் ஒரு மசூதி உள்ளது. இது முழுவதும் சிகப்பு மண் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த மசூதியின் எதிர் பக்கம் தாஜ்மகால் ஓய்வு அறை என்று அழைக்கப்படும் கட்டிடம் உள்ளது. இதுவும் சிகப்பு மண் கற்களால் கட்டப்பட்டது.
                அடுத்ததாக இங்கு புகழ் பெற்றதாக விளங்குவது தாஜ்மகால் தோட்டம் ஆகும். இது பாரசீக முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இது நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மையத்தில் இரண்டு வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஷாஜகான்-மும்தாஜ் காதலை பற்றி அறிவோம் 

 ஷாஜகான் மும்தாஜின் இரண்டாவது கணவர்.

மும்தாஜ் ஷாஜகானின் மூன்றாவது மனைவி. இது தவிர பல மனைவிகள் உண்டு.

மும்தாஜ் அவளது 14 ஆவது குழந்தை பிறக்கும் போது இறந்தாள்.

ஷாஜகான் பெண்களுக்கான தேடல் அதிகம் கொண்டவர் அவருடைய அரசவையில் அழகான பெண்களுக்கென்றே ஒரு இடம் வைத்திருந்தார். அங்கு ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது ஆனால் அழகான பெண்களுக்கு மட்டுமே அனுமதி.


தாஜ்மகாலை கட்டி முடித்தவுடன் இதே போன்று இன்னொரு கட்டிடம் அமைந்து விடக்கூடாது என்பதற்காக, அங்கு பணிபுரிந்த 22,000 பணியாளர்களின் கைகளும் துண்டிக்கப்பட்டன. மேலும் கட்டிட வடிவமைப்பாளரின் விழியைப் பிடுங்கி, தலையை வெட்டி கொலை செய்திருக்கிறார் ஷாஜகான்.


ஷாஜகான் தன்னுடைய மகள் ஜஹானாரா பேகமுடன் முறைதவறிய உறவு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.


மேலே சொல்லப்பட்ட விசயங்களில் எங்கு காதல் இருக்கிறது?. இத்தனை பேரை கொடுமைப் படுத்தி கட்டப்பட்ட கல்லறை எப்படி காதலின் சின்னமாகும். உண்மையில் உண்மையான காதல் தனக்கென சின்னமெல்லாம் வைத்து விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. அது பலரது மனங்களில் அன்பென்ற பெயரில் அமைதியாய் கிடக்கிறது.

வரலாறை தெரிந்து கொள்ளுங்கள்
காதலை புரிந்து கொள்ளுங்கள்

 

No comments:

Post a Comment